நாளைய தினம் தென்கிழக்கு வங்கக் கடலில் புதியதாக காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.
தென்கிழக்கு வங்கக் கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்தியப் பெருங்கடலின் நிலநடுக்கோட்டு பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலையானது நீடித்து வருகிற காரணத்தால் இந்த பகுதியிலேயே அடுத்த 24 மணி நேரத்தில் மற்றொரு குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகும் நிலை உள்ளது. இது வலுப்பெறவும் வாய்ப்பிருக்கிறது என ஆய்வு மையம் கூறியுள்ளது.
இதற்கு முன்பே தென்மேற்கு வங்கக் கடலில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காணப்படுகிறது. மாலத் தீவு, லட்சத்தீவு பகுதிகளில் ஒரு குறைந்த காற்றழுத்த தாழ்வுநிலை குடிகொண்டுள்ளது. அதனால் தமிழகம், புதுச் சேரியில் அடுத்த 4 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம் என எதிா்பாா்க்கப்படுகிறது. சென்னை புறநகர் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் இருக்கும். மழைக்கு பெய்யும் வாய்ப்பில்லை.
0 comments: