திருவண்ணாமலை பெரிய தெருவில் அமைக்கப்பட்டுள்ள தேசிய மயமான வங்கி முன்பு ஒரு ஏ.டி.எம். மையம் உள்ளது. இதில் மூன்று ஏ.டி.எம். எந்திரமும்,பணம் டெபாசிட் செய்யும் எந்திரமும் ஒன்றும் உள்ளது. நேற்று காலையில் பணம் எடுக்க வந்தவர்கள் ஏ.டி.எம். மையத்தில் ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்பட்டு கிடப்பதை பார்த்து அதிர்ந்தனர்.
போலீசுக்கு தகவல் தரப்பட்டது. திருவண்ணாமலை டவுன் போலீசார் ஏ.டி.எம். மையம் வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கப்பட்டன.
போலீசுக்கு தகவல் தரப்பட்டது. திருவண்ணாமலை டவுன் போலீசார் ஏ.டி.எம். மையம் வந்து பார்வையிட்டு கைரேகை நிபுணர் வரவழைக்கப்பட்டு கைரேகைகள் எடுக்கப்பட்டன.
கண்காணிப்பு கேமராக்களின் பவிவை பாா்த்தபோது, ஏ.டி.எம். எந்திரம் உடைக்கப்படும் காட்சி பதிவாகி இருந்ததது. நேற்று அதிகாலை 3.30 மணிக்கு லுங்கியுடன் இளைஞா் ஒருவர் ஏ.டி.எம். மையத்திற்குள் வந்து ஜெனரேட்டரில் இருந்த இரும்பு கம்பியை கொண்டுவந்து ஏ.டி.எம். இயந்திரத்தை உடைப்பது பதிவாகியிருந்தது. ஒன்றரை மணி நேரம் வரை போராடியும் எந்திரத்தை உடைக்க முடியாததால் அந்த வாலிபர் கோபத்தில் கம்பியை தூக்கி வீசிவிட்டு செல்வதும் பதிவாகியிருந்தது.
இந்த ஏ.டி.எம். மையத்தில் ரூ.50 லட்சம் பணம் இருந்தது. எந்திரத்தை உடைக்க முடியாததால் பணம் தப்பியது. கேமரா பதிவை வைத்து அந்த திருடனை போலீசார் தேடி வருகின்றனர்.
0 comments: